Thursday, March 19, 2009

எதை கிறுக்குவது?

காலைல ஆபீஸ் வந்ததும் என்னமோ தெரியல.. ஏதாவது கொலை பண்ணனும் போல வெறி.. ரொம்ப நேரமா யோசிச்சு சரி நாம ப்லாக் எழுதலாம்னு முடிவெடுத்தேன்.. :)



அப்புறம் நமக்கு தான் ஏற்கனவே blog இருக்கேனு லாகின் பண்ணி பார்த்தா நான் படித்து ரசித்த 2 ப்லாக்கெர்ஸ் (விக்னேஷ்வரன் மற்றும் கார்க்கி) என்னோட முதல் பதிவுக்கு பின்னூட்டம் இட்டிருந்தார்கள். தலை கால் புரியல.. நிஜமாங்க.. சொன்ன நம்பனும்.. அப்புறம் இப்போ கைல எழுதரிய இல்ல வேற எதுலயாவது எழுதரியனு கேக்க கூடாது.. நான் பாவம்ல..

சரி இன்னைக்கு கண்டிப்பா ஏதாவது கிறுக்கியே ஆகனும்னு முடிவு பண்ணிட்டேன்.. நான் ஒரு முறை முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்.. எப்படி இருந்தாலும் மத்தவங்க கேக்க மட்டங்கனு எனக்கு தெரியுமே.. தெரியுமே.. :)



இதனால சகலமானவருக்கும் அடியேன் தெரிவிப்பது என்னன்னா நான் எந்த டாபிக்ல blog எழுதறதுனு தெரியாம பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்கிறதால நம்ம சங்கத்த சேர்ந்த அனைவரும் சைட்ல இருக்கிற Poll-ல ஒரு பட்டன அமுக்கும்படி கேட்டு கொ(ல்)ள்கிறேன்..

நன்றி! நன்றி!! நன்றி!!!


உங்களது ஆசிர்வாதத்தை எதிர்பார்த்து
திலீப்